Monday, December 23, 2013

Book Release in Chennai, Kurinji Chuvai and Kaamoos (Arabic-Tamil Dictionary)




ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் (JSKAAH)  மௌலானா அவர்களின்
குறிஞ்சிச்
சுவை மற்றும் அரபு-தமிழ் (காமூஸ் ) அகராதி
நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் அவர்களது இலக்கியப்படைப்புகள் அறிமுக விழா.
அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை, தரீகத்துல்  ஹக்கியதுல் காதிரியா மற்றும்  ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை  ஆகிய அமைப்புகளின் நிறுவனரும், தமிழ் அறிஞரும்,  அரபி மொழி வல்லுனரும், இஸ்லாமிய ஆன்மீக ஸுஃபி ஞான குருவுமாகிய  சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் (JSKAAH) மௌலானா அவர்களின்

“குறிஞ்சிச் சுவை” என்ற அரிய தமிழ் இலக்கிய நூல்
 மற்றும்
 அரபு-தமிழ் (காமூஸ் ) அகராதி (Arabic- Tamil Dictionary)

ஆகிய நூல்கள்
வெளியீட்டு விழா மற்றும் அவர்களது இலக்கியப்படைப்புகள் அறிமுக விழா 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை  காலை 10.00 மணி முதல் எழும்பூர் காந்தி இர்வின் சாலையிலுள்ள "ஹோட்டல் ரமதா"வில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலிம் புலவர் எஸ். ஹுசைன் முஹம்மது மன்பஈ அவர்கள் இறைத்துதி ஓதி ஆரம்பம் செய்தார் .
அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை, டிரஸ்டி, ஜனாப் எச். எம். ஹபீபுல்லா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் அவ்வை நடராஜன் அவர்கள் தலைமை ஏற்று முதல் பிரதி வெளியிட்டு, நூல் வெளியீட்டுச் சிறப்புரை வழங்கினார்.
சென்னையிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் டாக்டர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் முதல் பிரதி பெற்று வாழ்த்துரை வழங்கினார்.
சென்னை பெரம்பூர் ஜமாலியா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி செய்யது நியாஸ் அஹமது ஜமாலி அவர்கள் அரபு - தமிழ் அகராதி (இரண்டாம் பாகம் ) வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
கவிஞர் மு. மேத்தா,
டாக்டர் நாகூர் ரூமி, ஆங்கிலத் துறைத் தலைவர் . மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்,
பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், தலைவர், பன்னாட்டுத் தமிழ் உறவு மன்றம்,
டாக்டர்.  ஹ. மு. நத்தர்சா, தமிழ்த் துறைத்தலைவர், புதுக் கல்லூரி , சென்னை.
மௌலானா மௌலவி அல்ஹாபில் அப்ஸலுல் உலமா. எம். ஷேகு அப்துல்லா ஜமாலி ஆகியோர்

நூலாசிரியர்  HH JSKAAH மௌலான அவர்களின்  மற்ற இலக்கிய மற்றும் ஆன்மீகப்படைப்பு (நூல்)களின்  சிறப்புகளையும் அவற்றின் இலக்கிய மற்றும் ஆன்மீக செறிவு பற்றியும் புகழாரம் சூட்டினார்கள்.
இறைமுரசு இ .வி.கே   முத்து முஹம்மது அவர்கள் திருநபி புகழ் பாடினார்.
திரு. முரளி அரூபன்  , துணைப் பேராசிரியர் , தமிழ்த்துறை , விழா நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

சென்னை உயர் நீதி மன்ற வழக்குரைஞர் அ . அப்துல் ரவூப், அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.    




















No comments:

Post a Comment