Monday, January 5, 2015

ஜமாலிய்யா ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் வழங்கிய நேர்காணல்



இலக்­கி­யமே ஓர் ஆழி

பிரபல எழுத்தாளர் ஜமாலிய்யா ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் வழங்கிய நேர்காணல்

நேர்கண்டவர் : முகமது  ஹிஜாஸ்

இலக்­கி­யமே ஓர் ஆழி,அதிற் கரை காண்­டலில் விழை­தலே அறிஞர் கடன். இலக்­கிய மின்றேல் எத­னினும் இன்பம் இராது. ஜமாலிய்யா ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஜமாலிய்யா ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் இளம் வயதிலேயே திருக்குர்ஆனை முழுவதுமாக ஓதிமுடித்து விட்டார்கள். திருக்குர்ஆன் ஓத தொடங்கியது முதல் மற்ற எல்லா அரபுக் கலைகளையும் அருமைத் தந்தையாரான ஜமாலிய்யா ஸெய்யித் யாஸீன் மௌலானாவிடமே முறைப்படி கற்றுத் தேர்ந்தார்கள். அதே போன்று வாழ்க்கைப் பாடத்தையும் தம் தந்தையாரிடமே முறையாகக் கற்று சன்மார்க்க ஞானமேதையாகவும் தமிழ்ப் புலவராகவும் திகழ்கிறார்கள்.
s.s.c. தேர்வுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்கள். பின்னர் காலி என்னும் ஊரில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வியைப் பூர்த்தி செய்த இவர் தமிழ் மொழி, அரபு மொழி, இஸ்லாமிய நாகரிகம் போன்ற பாடங்களைப் போதித்து பின்னர் அதிபராகவும், வட்டாரக் கல்வி அதிகாரியாகவும் கல்வி அதிகாரியாகவும் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார்கள் . அரபு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சம பாண்டித்தியம் பெற்றுள்ள கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும், இஸ்லாமிய இலக்கியத்துக்கும், தன்னை அறியும் மெய்ஞானத்துக்கும் இவர் ஈழத்தின் ஒரு மூலையிலிருந்து கொண்டு தனது 77ஆவது வயதிலும் ஆரவாரமின்றி அழகுதமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர்கள்  சங்கமத்துக்கு வழங்கிய நேர்காணலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எழுத்­தா­ளர்­க­ளுடன் அல்­லாது இந்­திய எழுத்­தா­ளர்­க­ளுடன் இணைந்து செயற்­பட காரணம் என்ன?

இலங்­கையில் கதவு தாழி­டப்­பட்­டி­ருந்­தது. புகுத முடி­ய­வில்லை. எனினும் இந்­தி­யாவில் கதவு விரியத் திறக்­கப்­பட்­டி­ருந்­தது. அங்கு புகு­தலில் எளிது கண்டேன். அத­னா­லேயே நாம் எழுதும் நூல்­க­ள­னைத்தும் அங்­கேயே அச்­சி­டப்­பட்­டன, அச்­சி­டப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அங்கு அதிக வர­வேற்பு இருந்­தது. இத­னா­லேயே இந்­திய எழுத்­தா­ளர்­க­ளுடன் இணைந்து செயற்­படக் கார­ண­மா­யிற்­றென்பேன்.

ஆரம்­ப­கால இலக்­கி­யத்­துக்கும் தற்­கால இலக்­கி­யத்­துக்கும் எவ்­வா­றான வேறு­பாடு காணப்­ப­டு­கின்­றது.?

எமது ஆரம்­ப­கால இலக்­கியம் சங்க கால இலக்­கிய நூல்­க­ளுடன் தொடர்­பு­டைத்து. எமது வயது பதி­னே­ழுக்கு மேல் மரபுக் கவி­தைகள் எழு­து­வதில் மிக்­கார்­வங்­கொண்டு எழுதி வந்தோம். அன்­றி­லி­ருந்து இன்று வரை எழு­தப்­படும் பாக்கள் யாவும் யாப்­பி­லக்­கண அமைவு கொண்­டுள்­ள­மையால் அன்றும் இன்றும் தரத்தில் ஒரே நிலை கொண்­டது. யாப்­பி­லக்­கண ஒழுங்கு முறைப்­ப­டியே புதுப்­பாக்­க­ளையும் எழு­துவோம். பாட்­டுக்கு எது­கையும் மோனையும் உயிர் போன்­றவை. யாப்­பி­லக்­கண வழு­வின்றி பா வமைத்­த­லையே புல­வர்கள் விரும்­பு­வார்கள். முன்னை விட இப்­போது யாத்­து­வரும் இலக்­கிய நூல்கள் மிக்­கன. (அதிகம்)

நீங்கள் துற­வற நிலைக்கு .செல்ல வேண்டி ஏற்­பட்­டதன் காரணம் என்ன?

எம் குடும்­பத்து முன்­னோர்­களில் அதிகம் பேர் இல்­லத்­து­றவு பூண்­ட­வர்­களே. வாழ்க்­கை­யோடு சம்­பந்­தப்­பட்ட துறவு எனின் சாலும். எமது துற­வறம் இல்ல மனை­யா­ளையும் பிள்­ளை­யையும் துறந்து கான­க­மே­கு­வ­தன்று. இத­னையே நாம் இல்­லத்­து­றவு என்போம்.

எவ்­வா­றான புத்­த­கங்­களை எழு­து­வ­தற்கு நாட்டம் கொள்­வீர்கள்? இது­வரை எத்­தனை நூல்­களை எழு­தி­யுள்­ளீர்கள்?

புரா­ணங்கள், கவி­தைகள் முத­லான இவை­யாவும் யாப்­பி­லக்­கண அமை­வோடு அமை­வ­தையே நாம் விரும்­பு­கிறோம். புது வகைக் கவி­தைகள் (பார­தியார் எழு­திய கவி­தை­களைப் பின்­பற்­றியும்) நூல்கள் எழு­தி­யுள்ளோம். இப்­போது உமர் (ரலி) புராணம் எனும் பெய­ருடன் ஒரு புராணம் எழு­தி­வ­ரு­கிறோம். ஓரி­லக்­கண நூலும் எழு­தி­வ­ரு­கிறோம். யாப்­பிலும் ஒரு­வி­ளக்க நூல் எழு­து­கிறோம். இது வரை இரு­பது நூல்­க­ளுக்­குமேல் எழு­தி­யுள்ளோம் . இன்னும் பல நூல்கள் அச்­சி­டற்­குள்­ளன.

இவ்­வ­ளவு காலம் இலக்­கி­யத்­து­றையில் இருந்தும் நீங்கள் வெளி­யு­ல­கிற்கு வராமல் இருந்­த­தற்­கான காரணம் என்ன?

முன்னர் ௦2 இலும் இது­பற்றி எழு­தி­யுள்ளோம். பகை­வரும் பொறா­மைக்­கா­ரரும் இதற்குத் தடைக்­கல்­லா­ய­மைந்­தி­ருப்பர் எனக்­க­ரு­து­கிறோம்.
சாத­ார­ண­மாக எழுத்­தாளர் ஒரு­வரின் பணி எவ்­வாறு இருக்க வேண்டும் என்று கரு­து­கின்­றீர்கள்?
நம்­பணி பணத்­துக்­காக வெனக் கரு­தா­தி­ருத்தல் வேண்டும். பெருமைக் கெழு­தாமல் இலக்­கி­யங்­க­ளுக்கு ஏற்ற தரத்தில் எழு­தல் ­வேண்டும். சங்­க­கால இலக்­கி­யத்­துக்கு அதன் தரத்­திற்­க­மைந்த நடையில் எழு­தல் ­வேண்டும். எதை எவர் வாசிக்­கி­றாரோ அவ­ருக்­கது பொருத்­த­மான நடை­யாக அமைவது சிறந்தது. சிறந்த இலக்­கி­யத்தை பத்­தி­ரிகைத் தமி­ழுடன் கலத்தல் நல்­ல­தன்று என்­பது எம்­க­ருத்து. எதை எவர் விரும்­பு­கி­றாரோ அதற்­கேற்ற விளக்கம் அதில் இருத்தல் வேண்டும்.

இளம் எழுத்­தா­ளர்­க­ளுக்கு நீங்கள் கூற­வி­ரும்­பு­வது என்ன?

மனங்­க­ளுக்­கேற்ற புதுப்­புது கல்­வி­யைத்­தரும் கலைத்­து­றைக்­கு­கந்த நல்ல விட­யங்­களை எழுதல் அவ­சியம். பார்த்­த­தையே பார்த்து பிர­தி­பன்­ணாமல் மன­துக்­கேற்ற நல்ல புது­வி­ட­யங்­களை எழுத்­தா­ளர்கள் அமைத்துக் கொள்ளல் வேண்டும். நல்ல இலக்­கியச் சொற்­களை அமைத்­துக்­கொள்ளல் வேண்டும். சொல்­லா­ராய்ச்­சி­யோடு எழுதல் வேண்டும். பல்­லு­டைக்கும் தமிழ் என்­றெல்லாம் கூறி கம்­ப­ரா­மா­யணம், சீறா புராணம் முத­லான மற்றும் சங்­க­கால இலக்­கிய நூல்­களை உதா­சீனம் செய்­யா­தி­ருத்தல் வேண்டும். ஆயின் சொல்­வ­ளர்ச்சி குன்றி தாயினும் தந்­தை­யினும் பேச்சு வழக்­குகள் எம்மில் ஊன்­றி­விடும். அதனை எளிய தமி­ழெ­னவும் சொல்ல முடி­யாது. கொச்சைத் தமிழ் வழக்கில் அது அமைந்­து­விடும். இவை­யெல்லாம் கவ­னித்து எழு­து­தலே இலக்­க­ணத்­துக்கும் இலக்­கி­யத்­துக்கும் தொண்டு செய்தல் என­வாகும்.

நீங்கள் வெளியிட்டுள்ள புத்தகங்கள் பற்றி-?

மகா­னந்­தா­லங்­கார மாலை – (சித்­திரக் கவிதை)
ஈழ­வள நாட்டிற் பயிர் பெருக்க வாரீர். (இலங்கை சாகித்­திய மன்­றத்தில் பரிசு பெற்­றது) பேரின்பப் பாதை (ஞான விளக்கம் தமிழில்) மனிதா! (அமுத மொழித் தொகுப்பு) கஸீ­ததுல் அஹ்­ம­திய்யா (அரபு தமிழ் வாரி­தாது பாக்கள்), தாகி­பி­ரபம் (ஞான விளக்கம்), இறை­ய­ருட்பா (ஞானக் கவி­தைகள்), அற்­புத அகில நாதர் (கவிதை), நாயகர் பன்­னிரு பாடல் (கவிதை), அவன் நாயகர் அருள் மொழிக் கோவை (ஆங்­கிலம்,தமிழ்) பத்று மௌலிது (அரபு மூலம் தமிழ் மொழி­பெ­யர்ப்பு), பர்­சன்ஜி மௌலித் (அரபு மூலம் தமிழ் மொழி­பெ­யர்ப்பு), துஹ்­பதுல் முர்­ஸலா (அரபு மூலம் தமிழ் மொழிபெயர்ப்பும் விளக்கமும்.), றிஸாலத்துல் கௌதிய்யா (தமிழ் மொழிபெயர்ப்பும் விளக்கமும்.) ஹகாயிகுஸ் ஸபா (பரமார்த்தத் தெளிவு ), மருள் நீக்கிய மாநபி , நபி வழி நம் வழி ,ஒளியை மறைக்க துணியும் தூசு இறைவலிய் ஸய்யிது முஹம்மது மௌலானா (கவிதை), உண்மை விளக்கம், குறிஞ்சிச் சுவை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அது மாத்திரம் அல்ல அடுத்தவருட முதற் பகுதியில் நூல்களை வெளியிடவும் உள்ளார்கள்.




No comments:

Post a Comment